×

கூடலூர் தபால் நிலையங்களில் இன்டர்நெட் இணைப்பு பாதிப்பு

கூடலுார், செப்.19:  கூடலூர் நகரில் உள்ள அஞ்சல் நிலையம் மற்றும் ஊட்டி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் ஆகியவற்றில், கடந்த நான்கு நாட்களாக இன்டர்நெட் இணைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
 இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் வரவு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மணியாடர் சேவையும், தபால் பட்டுவாடா சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகளவில் அஞ்சலக வங்கி சேவைகளை பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், கூடலூர் அஞ்சலகங்களில் இன்டர்நெட் கடந்த நான்கு நாட்களாக பாதித்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்டர்நெட் சேவை பாதிப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி