ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களுக்கான முகாம்

ஈரோடு, செப். 19:   ஈரோட்டில் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு முகாம் ஈவிஎன்., ரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இன்று (19ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதிக்குட்பட்ட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்களாக அளித்து பயன்பெறலாம். முகாமில் உரிய ஆலோசனை வழங்க 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  

   தனிநபர் மனுக்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் காலையிலேயே பெற்றுக்கொள்ளப்படும். எனவே, ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் குறை கேட்பு  முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: