விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

திருமங்கலம், செப்.19: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அவசர அலுவல்பணி காரணமாக அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்தவாரம் டிஆர்ஓ கூட்டம் இங்கு நடந்ததால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த வாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதுரையில் திடீரென அவசர அலுவல் பணிகள் காரணமாக தாலுகா அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்துகொள்ள சென்று விட்டனர். எனவே மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமையான 25ம் தேதி கூட்டம் நடைபெறும் என தாலுகா அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: