×

ராணுவ வீரர்கள் சண்டை

திருமங்கலம், செப்.19: திருமங்கலம் அருகே பாதை பிரச்னையில் அடிதடியில் ஈடுபட்ட 2 ராணுவவீரர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம் அடுத்துள்ள மேலஉரப்பனூரை சேர்ந்தவர் தவராஜ்(55). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்தோஷம்(54). பொதுபாதையை பயன்படுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 12ம் தேதி தவராஜின் மகனான ராணுவத்தில் பணிபுரியும் சிவராமனுக்கு(26) திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் உறவினர்கள் சீர்வரிசையை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தவராஜின் வீட்டிற்கு பிரச்னைக்குரிய பொதுபாதையில் கொண்டுவந்தனர். இதனை கண்ட சந்தோஷம் மகன் முருகேசன் பாதையில் முட்களை வெட்டிபோட்டு மறித்தார்.இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி பின்னர் அடிதடியில் இறங்கினர். இருகுடும்பத்தினரும் கம்பு, கம்பி, கட்டையால் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பினையும் சேர்ந்த பலர் காயமடைந்து திருமங்கலம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இது தொடர்பாக சந்தோஷம் கொடுத்த புகாரில் தவராஜின் மகன்களான ராணுவத்தில் பணிபுரியும் சிவக்குமார்(29), இவரது தம்பியும் புதுமாப்பிள்ளையுமான சிவராமன்(26), உறவினரான ராணுவவீரர் காசிராஜன் ஆகியோரையும், தவராஜ் கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷத்தின் மகன் முருகேசனையும் கைது செய்தனர். மேலும் ராணுவவீரர் மூர்த்தி உள்பட இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை