குண்டாசில் ‘கொய்யா’ கைது

மதுரை, செப்.19: மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் சரவணகுமார்(எ)கொய்யா சரவணன்(20). மாநகரில் இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், இவர் மீது மாநகர் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து கொய்யா சரவணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: