டவுன் பஸ் கண்ணாடி உடைப்பு

மேலூர், செப்.19: டூவீலரில் வந்த 2 பேர் அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் பயணம் செய்த சிலர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். அவர்களை கண்டக்டர் மற்றும் டிரைவர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரவு சிங்கம்புணரியில் இருந்து அதே டவுன் பஸ் திரும்பி வந்துள்ளது. பஸ்சை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த 2 பேர் நாவினிப்பட்டி அருகில் வரும் போது கற்களால் பின் பக்க கண்ணாடியில் தாக்கினர். இதில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது குறித்து டிரைவர் செல்வபாண்டி புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: