75வது ஆண்டுவிழா மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை, செப். 19: மதுரை தெற்கு கோட்டத்தைச் சார்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்(மெட்ரோ) தலைமையில் நாளை(செப்.20) நடக்கிறது. தெற்குகோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மாகாளிபட்டி, மகால், ஜான்சி ராணி பூங்கா, அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி மற்றும் அனுப்பானடி பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Related Stories: