பழநி, செப். 19: பழநி ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையில் பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. சுற்றுப்புறத்தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, தனிநபர் கழிப்பறை, கொசு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நோட்டீசில் விளக்கப்பட்டிருந்தன.