திமுக சார்பில் குடும்ப நிதி

திண்டுக்கல், செப். 19: திமுக தலைவர் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சியில் மரணமடைந்தனர். இவர்களின் குடும்பத்திற்காக திமுக நலநிதியை அறிவித்தது. இதற்காக தலா ரூ.2லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி அதிர்ச்சிமரணம் அடைந்த ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையைச் சேர்ந்த திமுக.தொண்டர் செல்வராஜ் குடும்பத்திற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இறந்தவர் மனைவி திலகவதியிடம் திமுக.கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் காசோலையை வழங்கினார்.உடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக.செயலாளர்கள் சிவகுருசாமி, மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன், பேரூர் கழக செயலாளர்–்கள் சண்முகம், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: