மயங்கி விழுந்த கொத்தனார் சாவு

புதுச்சேரி,  செப். 19:    விழுப்புரம் மாவட்டம், பாக்கம், வெள்ளாழங்குப்பம் பகுதியைச்  சேர்ந்தவர் கலியபெருமாள் (62). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் பாரதி  வீதியில் உள்ள தனியார் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் வேலை  செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்த நிலையில்  அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலியபெருமாள்  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரித்து  வருகின்றனர். அவர் மாAரடைப்பில் இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது  தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Related Stories: