புதுச்சேரி, செப். 19:பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த மாநில அரசுகளே ரூ.2 முதல் ரூ.3 வரை குறைத்துள்ளன. அதுபோல் புதுச்சேரியிலும் மாநில அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் காவலர் தேர்வுக்கு 22 வயது என உச்சவரம்பு உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்
களில் 24 வயதாக இருக்கிறது. வயது வரம்பு பிரச்னையால் புதுச்சேரியை சேர்ந்த ஏழை இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காவலர் தேர்வுக்கு வயது வரம்பை தளர்த்தி 24 ஆக நிர்ணயிக்க ேவண்டும். புதுச்சேரி இளைஞர்கள் நலன் கருதி கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் எங்களை அணுகினால் நாங்கள் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து தீர்வு காண்போம். அதைவிடுத்து மாற்று கட்சிகளை அழைத்து பேசினால் தீர்வு கிடைக்காது. புதுச்சேரி அரசு திட்டங்களை நிறைவேற்றாமல் எல்லாவிதத்திலும் தோல்வி அடைந்து செயல்இழந்து விட்டதால் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.