ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

ஆத்தூர், செப்.19: ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் மின் விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பாலத்தின், கீழ் விளக்குகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பெத்தநாயக்கன்பாளையம் ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில், மேம்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக சர்வீஸ் சாலை ஏத்தாப்பூர் பகுதிக்கு செல்கிறது. இந்த பாலத்தின் கீழ் மற்றும் மேல் பகுதியில் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நல்ல நிலையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதனால், பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த மின் விளக்குகள் திடீரென பழுதாகி எரியாமல் ேபானது.இதனால் இரவு நேரத்தில் பாலத்தின் மீது வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பழுதான மின் விளக்குகளை சரிசெய்து சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: