அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, செப். 19: உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர்கள் முருகன், வசந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொகுதி செயலாளர் சேரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு, மாவட்ட துணை அமைப்பாளர் ராமு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவு மணல் மற்றும் ஏரி மண் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். மாடல் காலனி பகுதியில் தொடர் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராம்கி, இளையராஜா, பூபாலன், கோவேந்தன், காத்தவராயன், வெங்கடேசன், அரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: