லஷ்மி கலை அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாடு கருத்தரங்கம்

சின்னசேலம், செப். 19: கள்ளக்குறிச்சி லஷ்மி கலை அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். லஷ்மி கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர்கள் சாந்தி, சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லஷ்மி கலை கல்லூரி முதல்வர் ராசேந்திரன், லஷ்மி பிஎட் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், கலை கல்லூரி துணை முதல்வர் சேதுமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திருச்சி பெரியார் கல்லூரி பேராசிரியர் ரவி கலந்துகொண்டு, இன்றைய மின்னணுவியல் பயன்பாடு என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். மேலும் கணினி அறிவியல் தொடர்பான கருத்துகளை கூறி இவற்றை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு தன்னம்பிக்கை, செயல்திறன் குறிக்கோளை அடைதல் குறித்து கருத்துகளை கூறினார். மூன்றாம் ஆண்டு மாணவர் விஜய் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் சங்கீதா, சபியாபானு ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் சீனுவாசன், பேராசிரியர்கள் நடராஜன், ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: