கடையம், செப்.19: கடையம் அருகே சம்பன்குளத்தில் சாலைவசதி மற்றும் அடிப்படை வசதி செய்து தர கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முகமதுசரீப் தலைமை வகித்தார். மமக கிளை செயலாளர் செய்யது மசூது முன்னிலை வகித்தார். மமக மாவட்ட செயளாலர் கொலாம் பஸ்மீரான் கண்டன உரையாற்றினார். தொண்டரணி மாவட்ட பொருளாளர் ஆதம்பின்ஹனிபா,எஸ்எம்ஐ மாவட்ட பொருளாளர் அபாபில்மைதின், ஊடகப்பிரிவு மாவட்ட பொருளாளர் ஆதம்பின் ஆசிக், ஊடகப்பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் பொட்டல் ஈசாக், பொட்டல் சித்திக் மீரான் மைதீன் மற்றும் கடையம் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், விடுதலைசிறுத்தைகட்சி மாவட்ட துணை செயலாளர் அருள்செல்வம் கலந்துகொண்டனர்.