பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

நெல்லை, செப்.19: பெரியார் பிறந்த நாளை யொட்டி அண்ணா திராவிடர் கழகம் நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைசெயலாளர் கார்த்திகேயன், கடையநல்லூர் நகர செயலாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் உதயகுமார், கடையநல்லூர் நகர பொருளாளர் காசி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: