ஆழ்வார்குறிச்சி அருகே இளம்பெண் மாயம்

கடையம், செப்.19: ஆழ்வார்குறிச்சி அருகே இளம் பெண் மாயமானார். ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூர் இந்திரா காலனியை சேர்ந்த முனியம்மாள் மகள் நாகதேவி (19). இவர் கடந்த ஒரு வருடமாக கரூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 20 நாட்கள் முன்பு கரூர் சென்று தனது மகளை ஊருக்கு அழைத்து வந்தார். கடந்த 4ம் தேதி வெளியில் சென்ற நாகதேவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முனியம்மாள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: