திருக்கோவிலூர், செப். 19: திருக்கோவிலூர் அடுத்த கீழக்கொண்டூர் கிராமத்தில், சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தரப்பினர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கோஷமிட்டபடி ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கலுவராயன் வீட்டருகே சென்றபோது அவர் அமைதியாக விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஜெயச்சந்திரன் தரப்பினருக்கும், கலுவராயன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துக்கொண்டனர். இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன், கலுவராயன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும், கலுவராயன் மகள் தேவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.