நெல்லை, செப். 19: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் ஊழியர்கள் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1 கோடி நிவாரண உதவி அளிக்கப்பட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சீரமைப்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட சங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன.