கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி

நெல்லை, செப். 19: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் ஊழியர்கள் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1 கோடி நிவாரண உதவி அளிக்கப்பட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சீரமைப்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட சங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர். இதனுடன் வங்கியும் சேர்ந்து மொத்தம் ரூ.1 கோடியை நிதியாக அளித்துள்ளது. நேற்று வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, பொதுமேலாளர்கள் மற்றும் திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ஆகியோர் ரூ.1 கோடிக்கான காசோலையை கேரள தொழில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஜெயராஜனிடம் வழங்கினர்.

Related Stories: