கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வீரவநல்லூர், செப்.19: கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு  கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை செயல்அலுவலர் முருகன் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.  மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: