விவசாயி வீட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி, செப். 19: விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(53), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு திண்ணையில் குடும்பத்துடன் தூங்கினார். காலையில் எழுந்து வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகள், வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். இதுகுறித்து முருகன் வரஞ்சரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Related Stories: