நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நெல்லை, செப். 19:  எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு  எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். இது குறித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள்,  மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு  நுகர்வோர்கள் பங்கேற்கும் எரிவாயு நுகர்வோர் கூட்டம்  நாளை (20ம் தேதி) மாலை 4 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ முத்துராமலிங்கம் தலைமையில் நடக்கிறது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: