சின்னசேலம், செப். 19: கச்சிராயபாளையம் கோமுகி அணையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் வகையில் குவாரி அமைக்காததை கண்டித்தும், பயனாளிகள் தொகுப்பு வீடு கட்ட மணல் அள்ள அதிகாரிகளே தடையாக இருப்பதை கண்டித்தும் தொகுப்பு வீடு கட்ட அரசு வழங்கிய உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்தில், சின்னசேலம் வட்டார அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் தங்கதுரை, ரங்கநாதன், முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைபொது செயலாளர் வெங்கடேசன், மாநில தலைவர் பாலசுந்தரம் சங்க வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் வடக்கநந்தல், சங்கராபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் தொகுப்பு வீடு, மோடி வீடு கட்ட அரசு உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் வீடு கட்டி
வருகின்றனர்.