மண் கடத்திய லாரிகள் பறிமுதல்

பணகுடி,செப்.19: பழவூர் பகுதியில் மண் கடத்திய 5 லாரிகள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியை சுற்றியுள்ள பல குளங்களில் போலி பாஸ் தயாரித்து மண் அள்ளப்படுவதாக பழவூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) டேவிட் ரவிராஜன் தலைமையிலான போலீசார் கண்ணங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 5 டிப்பர் லாரிகள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களுடன் மண் அள்ளியது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.

இதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் லாரிகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். பழவூர் பகுதியில் சமீப காலமாக தொடர்ந்து மண் கடத்தல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: