ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஆம்பூர், செப்.19: ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். ஏற்கன்வே 2 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆனது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த அப்பாஸ் அலி, அவரது நண்பர் ஜூபேத் அஹமத். இவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் முடிந்து திரும்பிய தங்கள் குடும்பத்தினரை கார்களில் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே வந்தபோது லாரி மீது அப்பாஸ் அலி ஓட்டிய கார் மோதியது. இதில் அப்பாஸ் அலி மற்றும் ஜூபேத் அஹ்மத் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தர்மபுரி மதரசாவில் ஆசிரியராக வேலை செய்து வந்த அப்துல் ரஹ்மான்(38) சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த அப்துல் ரஹ்மானுக்கு பஷீரா என்ற மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர்.

Related Stories: