திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டில் 25 சவரன் நகை, ₹5 லட்சம் திருட்டு

திருப்பத்தூர், செப். 19: திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ₹5 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டைத் தெரு பாத்திமா நகரை சேர்ந்தவர் அனிப்பாஷா. பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தனது அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். வீட்டில் இவரது மனைவி அசினாபானு தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் சிகேஎஸ் ரோடு சுல்தான்மியா தெரு உள்ள தனது தாய் வீட்டுக்கு அசினாபானு சென்றார்.

பின்னர் நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை மற்றும் ₹5 லட்சம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: