விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ₹1 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், செப்.19: விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ₹1லட்சம் மோசடி செய்தது குறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரி(28), வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக ஒருவர் அறிமுகமானார். நான் வேலை தேடிக்கொண்டிருப்பதை தெரிந்துெகாண்ட அவர்,

விமான நிலையத்தில் எனக்கு அதிகாரிகளை தெரியும், நான் உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறினார். மேலும் அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார். அதனை நம்பிய நான், அவர் தெரிவித்த வங்கி கணக்கில் ₹1லட்சத்து 2ஆயிரத்து 350ஐ செலுத்தினேன். ஆனால் பணம் பெற்றவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமாரி, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: