மணல் கடத்திய 5 பேர் கைது வேலூர் அருகே

வேலூர், செப்.19: வேலூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விரிஞ்சிபுரம் எஸ்ஐ சிவசந்திரன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்கை மேம்பாலம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பொய்கையைச் சேர்ந்த சேகரன்(42), செல்வம்(40), தீர்த்தமலை(60), முரளி(54) ஏரிபுதூர் கமலகண்ணன்(55) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: