சீராக குடிநீர் வழங்க கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி, செப்.19: குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 34வது வார்டு பகுதி. இங்குள்ள ஆசீர்வாதநகர், டிஎம்பி காலனியில் சில தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிமுக பிரமுகர் சந்தானம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர்களிடம் மத்தியபாகம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: