கோவில்பட்டி, செப்.19: கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐந்தொழிலாளர்கள் தொடர்பான ரத ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விஸ்வேஸ்வர விநாயகர் கோயிலில் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜைகளும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு விஸ்வகர்மா உருவபடத்துடன் ஐந்தொழிலாளர்கள், ஐந்தொழில்கள் தொடர்பான ரத ஊர்வலம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு விஸ்வகர்ம ஜெயந்தி விழாக்குழு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். விழா குழுவை சேர்ந்த பாலமுருகேசன், ராமச்சந்திரன், முருகன் முன்னிலை வகித்தனர்.