கோவில்பட்டி, செப்.19: அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை காப்போம் எனும் முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியூசி சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட பிரசார குழுவினருக்கு கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் சரோஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட இந்த பிரசார குழுவினர் பல்வேறு பகுதிகளில் வழியாக சென்று வரும் 23ம் தேதி திருப்பூரில் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர். முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி தலைமையிலான இந்த பிரசார குழுவில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், லட்சுமணன், தினேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.