கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்

தூத்துக்குடி, செப்.19: தூத்துக்குடியில் திருக்குறள் பேரவையினர் சார்பில்  கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். உலக திருக்குறள் பேரவையின் தூத்துக்குடி கிளை சார்பில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு, முன்னாள் கல்லூரி முதல்வர் ஜவகர்லால் தலைமை வகித்தார். மாவட்ட கிளை செயலாளர் அன்பழகன், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஓய்வுபெற்ற சார் ஆட்சியர் ஜனார்த்தனன், தமிழ் ஆசிரியர் ராசலிங்கம், கவிஞர் செல்வராமன், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டவர்கள்  கவிதையுடன்  புகழ் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: