திருச்செந்தூர் ஆறுமுகநேரி குரும்பூரில் இன்று மின்தடை

திருச்செந்தூர்,   செப். 19: திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட   ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(19ம் தேதி)  நடக்கிறது. இதன் காரணமாக புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம்,   அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கி விளை, கானம்,   வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா,   காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம்,   குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி   முதல் மாலை 5 மணி வரை மின்ம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில்   தெரிவித்துள்ளார்.

Related Stories: