மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை கூட்டு பலாத்காரம்: முதியவர் உட்பட 3 பேர் கைது ,மூவருக்கு வலை

சென்னை: மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த முதியவர் உட்பட 3 பேரை  போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு ஒரு மகன், குமுதா (16) என்ற பிள்ளைகள் உள்ளனர். (அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன). சிறுமி குமுதா மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குமரன், கனகாவை பிரிந்து சென்றார். பின்னர் கனகா, கூலி வேலை ெசய்து, பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக சிறுமி குமுதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ மகிதஅன்னகிருஷ்டி வழக்குப்பதிவு  செய்து விசாரித்தார். அதில், மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.

இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம்  (61), சிதம்பரம் (45), சங்கர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: