சென்னை: பழவேற்காடு பகுதியில் கோட்டகுப்பம், லைட்அவுஸ் குப்பம், பழவேற்காடு தாங்கல், பெரும்புலம், என நான்கு ஊராட்சிகளில் 46 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரி - கடல் இணையும் பகுதியில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த ஆண்டு பழவேற்காட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க 27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் திரண்டு முகத்துவார கடற்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.