தூத்துக்குடியில் 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மாயம்

தூத்துக்குடி, செப்.19:தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி துரைராஜ்(40). இவரது மனைவி கோமதி(38), இவர்களுக்கு இந்து என்ற இலக்கியா(17),  அன்புசெல்வம் (15) ஆகிய இருமகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோமதி, மகள்களுடன் கடந்த மே 30ம்தேதி   வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து துரைராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் எஸ்ஐ முத்துமாலை தலைமையிலான சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர். இதுபோல தூத்துக்குடி ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மகள் பிரியா(16).

இவர் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகேயுள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்துராஜா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாதவன்நாயர் காலனியை சேர்ந்தவர் மம்முதுஅலி மகன் கமார்தீன்(22). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 7ம்தேதி வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு பைக்கில் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி இன்சா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையிலான வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து கமார்தீனை தேடி வருகின்றனர்.

திருட்டு வழக்கில் தொழிலாளி கைது

தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்தவர் விவேகானந்தன் (35). பில்டிங் கான்டிராக்டரான இவர் தூத்துக்குடியில் தனியார் கல்லூரி ஒன்றில் கட்டிட பணி  மேற்கொண்டுள்ளார். சம்பவத்தன்று அங்கு வந்த மர்மநபர், அங்கிருந்த இரும்பு குழாய் துண்டிக்கும் கருவியை திருடிச் சென்றார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், இதில் ஈடுபட்ட தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்த தொழிலாளி முத்துராஜை (49) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரும்பு குழாய் துண்டிக்கும் கருவியை மீட்டனர்.

Related Stories: