துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூர், செப். 18:  தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்ட அரசாணையின்படி  குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருவிடைமருதூர் ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள், ஓஎச்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உள்ளாட்சி துறை ஊழியர் சங்க சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். கலியமூர்த்தி, பாண்டியன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்டசெயலாளர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி கண்டன உறையாற்றினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து வட்டாச்சி ஆணையர் குமார், கிராம வட்டார வளர்ச்சி ஆணையர் உமாவிடம் மனு அளித்தனர்.

Related Stories: