தேவராயன்பேட்டை சிவன் குளம் தூர்வாரப்படுமா?

பாபநாசம், செப். 18:   தேவராயன்பேட்டையில் சிவன் குளத்தை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் தேவராயன்பேட்டையில் சிவன் குளம் உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சிவன் குளம், தண்ணீர் வரும் பாதையான கேசவன் வாய்க்காலை தூர்வாரவில்லை. இந்த குளத்தை சுற்றி வீடுகள் உள்ளன. இந்த குளத்தில் நீர் இருந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டம் உயரும். இந்த குளம் மட்டுமின்றி கேசவன் வாய்க்கால், வடக்கு வாய்க்கால், தெற்கு வாய்க்கால் உள்ளிட்ட எந்த  வாய்க்காலையும் தூர்வாரப்படவில்லை. எனவே பருவமழை துவங்கும் முன் சிவன் குளம் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றனர்.

Related Stories: