தஞ்சை மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

தஞ்சை, செப். 18:  பெரியார் பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மாலை அணிவித்தார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அன்பரசன், தஞ்சை வட்டார தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் மார்க்கெட் சிதம்பரம், வரகூர் முருகன்  பங்கேற்றனர். கும்பகோணம்: கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு  திமுக மாவட்ட செயலாளர்  கல்யாணசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ராசாராமன், கவிதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் கவுதமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட கூட்டுக்குழு தலைவர் மில்லர், மாநில மாணவரணி செயலாளர் அஜித்தன், நகர செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அரவிந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோவன், மகளிரணி அம்பிகா பங்கேற்றனர்.

பேராவூரணி:  பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர்  திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மதிமுக ஒன்றிய செயலாளர் மணிவாசன், மெய்ச்சுடர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட புரவலர் வேலு தலைமையில்   மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், மாவட்ட துணை செயலாளர் நீலகண்டன், மாவட்ட துணைத்தலைவர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் பெரியார்ராசன் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், நகர வர்த்தக கழக தலைவர்  ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பட்டுக்கோட்டை:  பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற  கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றிய அமைப்பாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். பொறியாளர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகோபிசங்கர், பொறியாளர் கலைச்செல்வன், ராமு, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பெரியார் சிலைக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் சதா சிவக்குமார் மாலை அணிவித்தார். அதேபோல் தமிழக மக்கள் புரட்சி கழகம் சார்பில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மதுக்கூர் ஒன்றிய பொருளாளர் கைலாசம் தலைமையில் பொது செயலாளர் முருகையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: