திருச்சி, செப்.18: மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
வேலைநாடும் படித்த இளைஞர்கள் கிராமப்புறங்களில் அதிக அளவில் உள்ளதால், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்காக பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு போன்ற செயல்பாடுகள் கிராமப்புற வேலைநாடுநர்களை சென்றடையும் வகையில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால், 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் பயிற்சி முகாம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி வரும் 20ம் தேதி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.இதில் மண்ணச்சநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளாலம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.