140வது பிறந்த நாள் பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

திருச்சி, செப்.18:  பெரியாரின் 140 பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, திக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளான நேற்று (செப்.17) பெரியாரின் சிலை மற்றும் படத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருச்சி மாவட்ட திமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மண்டிசேகர், மோகன்தாஸ், இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குமார் எம்பி, அமைப்பு செயலாளர் பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர், நிர்வாகிகள்பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அமமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அருள், திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர். பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.துறையூர்: துறையூரில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவரணி மண்டல செயலாளர் தினேஷ்பாபு தலைமை வகித்தார்.  பகுத்தறிவு கழக மாநில துணைத் தலைவர் மணிவண்ணன், அஜிதன் ஆகியோர் முன்னலை வகித்தனர். நகர மாணவரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். நிகழ்ச்சியில் தி.க. மாநில அமைப்பாளர் அன்புராஜ் சிறப்புரையாற்றினார். வால்டர், ஆல்பர்ட், அன்புராஜா, பிரபு, சண்முகம், கலைப்பிரியன், ரத்தினம்உள்ளிட்டோர் இரு அணியாக பிரிந்து பெரியாரின் புகழ்  குறித்து பேசினர். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: