கேரளா வெள்ள பாதிப்பு ஜமால் முகமது கல்லூரி நிதியுதவி

திருச்சி, செப்.18:  திருச்சி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஜமால்முகமது கல்லூரி நிர்வாகம், சுயநிதி பிரிவு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் சார்பாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ராஜாமணியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் காஜா நிஜாமுதின், முதல்வர் இஸ்மாயில் முகைதீன், கல்லூரி உதவி செயலர் அப்துல் சமது, கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குநர் அப்துல்காதர்நிகால் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: