மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

திருச்சி,செப்.18: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 426 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றகோருதல், பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடா்பான 96 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 2 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 21 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 9 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 5 மனுக்களும், புகார் தொடர்பான 16 மனுக்களும் பெறப்பட்டது. இதேபோல கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 2 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி, தொடர்பாக 2 மனுக்களும், பென்ஷன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் தொடர்பாக 1 மனு என பல்வேறு கோரிக்கை தொடர்பாக 154 மனுக்களும், இதர மனுக்கள் 272 என மொத்தம் 426 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். 426 மனுக்கள் குவிந்தன

Related Stories: