மண்ணச்சநல்லூர்,செப்.18: மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருவெள்ளரை ஊராட்சி எம்ஜிஆர் நகரில் பகுதியில் தார் சாலை வசதி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருவெள்ளரை ஊராட்சியில் உள்ளது எம்ஜிஆர் நகர். எம்ஜிஆர்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருவெள்ளரை துறையூர் மெயின்ரோட்டில் இருந்து திருவெள்ளரை கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. சுமார் ஒரு கிமீ தூரம் உள்ள இந்த சாலை மண்சாலையாகவே உள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் இந்த சாலையில் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மழை காலங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்ல சிரமப்படும் நிலை உள்ளது- மேலும் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி அது சாக்கடையாக மாறி கொசுக்கள் உற்பத்திக்கும் காரணமாக அமைகிறது. இதனால் நோய்கள் எளிதில் பரவுகின்றன. எனவே இந்த சாலையை தார் சாலையாக அல்லது தரமான கப்பி சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாதிக்கப்பட்டு வருவதால் சமயபுரம் பகுதியில் சூதாட்டத்தை போலீசார் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணம் தொலைக்கும் ஆண்களால் பெண்கள் அவதி