சாலையில் வீணாக ஓடும் குடிநீர்

திருப்பரங்குன்றம், செப்.18:  அழகப்பன்நகர் ரயில்வே கேட் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு  சாலையில் குடிநீர் வீணாகிறது. திருப்பரங்குன்றம் சாலையில் அழகப்பன்நகர் ரயில்வே கேட் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாயில்  இருந்து குடிநீர் கசிந்து ஊற்று போல வெளியேறி வருகின்றது.  கடந்த சில நாட்களாக இந்த தண்ணீர் சாலையில்  வீணாக செல்கின்றது. குழாய் உடைப்பினால்  இப்பகுதியை சேர்ந்த ஐநூற்றுக்கும்  மேற்பட்ட வீடுகளில் குடிநீர் கிடைப்பது தடைபட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே  குடிநீர் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: