விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம்

நத்தம், செப். 18: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நத்தம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, கோவில்பட்டி, ஊராளிபட்டி, ஆவிச்சிபட்டி, நடுவனூர், சேர்வீடு உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு சார்பாக 45க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. வழிபாட்டுக்கு பின் விநாயகர் சிலைகள் கரைப்பிற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.நத்தம்-கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து மேளதாளம் வாணவேடிக்கையுடன் புறப்பட்ட ஊர்வலம் பஸ்ஸ்டாண்ட், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை வழியாக சென்றுஅம்மன் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டுக்கல், பழநி, கொடைக்கானலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Related Stories: