பெரியார் பிறந்தநாள் பேரணி, அஞ்சலி

திண்டுக்கல், செப். 18: தந்தை பெரியார் 140வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைந்து பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இருந்து கிளம்பிய பேரணி மாநகராட்சி அலுவலகம் வழியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அனைத்து கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பேரணிக்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான அர.சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், நத்தம் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பாண்டி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, தந்தை பெரியார் கழக நிர்வாகிகள் சம்பத், ராவணன், திராவிடர் இயக்க புலேந்திரன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.*நிலக்கோட்டையில் திராவிட கழகம் சார்பாக நடந்த பெரியார் பிறந்தநாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகிக்க, நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் அருகேயுள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி செயலாளர் சக்திசரவணன் நன்றி கூறினார்.

Related Stories: