திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் சிசிடிவி பொருத்தம் நிறைவு

திண்டுக்கல், செப். 18: திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் சிசிடிவி பொருத்தும் பணிகள் நிறைவடைந்தது.திண்டுக்கல் பஸ்நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து கேமரா பொருத்தும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் மனோகர் திண்டுக்கல் பஸ்நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார். கேமராக்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த அவர் தொடர்ந்து பஸ்நிலையத்தில் நடக்கும் விரிவாக பணிகளையும் பார்வையிட்டார். உடன் நகர அமைப்பு ஆய்வர் புவனேஸ்வர், பஸ்நிலைய சுகாதார அலுவலர் சுரேஷ் மற்றும் பலர் இருந்தனர்.

Related Stories: