திண்டுக்கல், செப். 18: சிலுவத்தூர் அருகே வி.டி.பட்டி வி.கோவில்பட்டி பகுதிகளை ேசர்ந்த மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘ஆதிக்க சாதியினர் எங்களை கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை.
மேலும் நாடகமேடை, மேல்நிலை தண்ணீர்தொட்டி, தரைநிலை தண்ணீர் தொட்டி, திருமணமண்டபம் போன்றவற்றிற்கு கம்பிவேலி அமைத்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி நுழையவிடாமல் தடுக்கின்றனர்.எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.