நத்தம், செப். 18: பழமொழிக்கு ஏற்ப நத்தம் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.‘பெய்து பிறக்க வேண்டும் புரட்டாசி, பெய்யாமல் பிறக்க வேண்டும் ஐப்பசி’ என்பது பழமொழி. இதற்கேற்ப மழை பெய்து மாதம் பிறப்பது ஒரு அபூர்வமாகும். இது நத்தம் பகுதியில் நடந்துள்ளது.
அதாவது ஆவணி மாதம் முடிந்து நேற்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையே நத்தம் பகுதியில் மழை பெய்தது. பழமொழிக்கு ஏற்ப மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் பருவமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.